மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைப்பு : 6 முக்கிய வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

Jun 1 2023 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

மணிப்பூர் கலவர வழக்கில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பான நிலவரம் குறித்து ஆராய 4 நாட்கள் பயணமாக அங்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள், சமுதாய தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணிப்பூர் கலவரம் தொடர்பான 6 வழக்குகளை சிபிஐ விசாரிக்கும் என தெரிவித்தார். மணிப்பூர் ஆளுநர் தலைமையில் முக்கிய பிரமுகர்கள் கொண்ட அமைதிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அமித்ஷா, கலவரத்தில் காயமடைந்தோர், சொத்துக்களை இழந்தோருக்கான நிவாரணம் தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என்றார். கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் 5 மருத்துவ குழுக்கள் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், ஆயுதங்களை யாரேனும் வீட்டில் வைத்திருந்தால் அதனை ஒப்படைக்க வேண்டும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00