பத்திரிகையாளரை தாக்கியதாக நடிகர் சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கு : தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
Mar 30 2023 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், மும்பையில் பத்திரிகையாளரைத் தாக்கியதாக, தொடரப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, சல்மான்கான் மும்பை வீதிகளில் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, பத்திரிகையாளர் அசோக் பாண்டே என்பவர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்தார். இதற்காக சல்மான் கானின் பாதுகாவலரிடம் அவர் அனுமதி பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதனை அறியாத சல்மான் கான், கோபத்தில் பத்திரிகையாளர் அசோக் பாண்டேவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சல்மான்கான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை தள்ளுபடி செய்து மும்பை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.