வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
Feb 6 2023 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதிவேகப் பயணம் மற்றும் விமானத்தில் அளிக்கப்படும் சேவைகளைப் போன்ற தரமான சேவைகளை அளிப்பதற்காகவே வந்தே பாரத் என்ற ரயில் போக்குவரத்தை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், போதுமான வழித்தடங்களில் அந்த ரயில்களை இயக்கத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, உயர் தர உணவு உள்ளிட்ட சேவைகளும் அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இது போன்ற ஒரு ரயிலில் அளிக்கப்பட்ட உணவு, மோசமான தரத்தில் இருந்ததாகவும், பிழிந்தால் எண்ணெய் வருமளவுக்கு உணவுப் பொருட்கள் இருந்ததாகவும் வீடியோ ஆதாரத்துடன் பயணி ஒருவர் சமூக வலைதளங்களில் ஒரு செய்தியைப் பகிர்ந்தார். இந்தச் செய்தி தற்போது ஏராளமான நெட்டிசன்களால் பகிரப்பட்டு வருகிறது.