மணிப்பூரின் உக்ருல் நகரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4-ஆக பதிவு : தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல்
Feb 4 2023 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4-ஆக பதிவானது.இந்நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள், கட்டடங்கள் குலுங்கியதால், பாதுகாப்பிற்காக சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.