சுதந்திர தின விழா நாளையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
Aug 14 2022 5:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி ஜம்மு காஷ்மீரில் அது தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீரில் நாளை சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் கண்காணிப்பாளர் ரயிஸ் பட், சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ட்ரோன் விமான கண்காணிப்பு, ரோந்துப் பணி போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.