லடாக்கில் 18,400 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - உத்தரகாண்டில் 14,000 அடி உயரத்தில் மூவர்ணக்கொடி
Aug 13 2022 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் 3 நாள் கொண்டாட்டமாக, பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் 18 ஆயிரத்து 400 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் தேசியைக்கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.
இதேபோல், உத்தரகாண்டிலும் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார் 14 ஆயிரம் அடி உயரத்தில் மூவர்ணக்கொடியை ஏற்றினர்.
சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த ஆயிரம் போலீசார் இருசக்கர வாகனத்தில் தேசியைக் கொடியை ஏந்தி பேரணி சென்றனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற தேசியக் கொடி பேரணியில் மத்திய வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
உத்தரகாண்டில் நடைபெற்ற மூவர்ணக்கொடி பேரணியில், முதலமைச்சர் திரு. புஷ்கர் சிங் தாமி பங்கேற்று, தேசியைக் கொடியை ஏந்தி சென்றார்.
கவுஹாத்தியில் நடைபெற்ற பேரணியில் அசாம் முதலமைச்சர் திரு. ஹிமாந்த பிஸ்வா சர்மா கலந்து கொண்டு மூவர்ணக்கொடியை ஏந்தி சென்றார்.