ஊழியரிடம் சாதி வெறியோடு பேசிய நடிகர் விக்னேஷை கைது செய்ய விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வன்னி அரசு வலியுறுத்தல்
Jun 8 2023 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தன்னிடம் பணியாற்றும் ஊழியரிடம் சாதி வெறியோடு பேசிய நடிகர் விக்னேஷை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி வன்னி அரசு வலியுறுத்திள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆடியோ ஒன்றில், நடிகர் விக்னேஷிடம் பணிபுரியும் ஊழியர் ஒருவர், சரியான ஊதியத்தை கேட்க, முதலில் மறுத்த விக்னேஷ் பிறகு இவ்வளவு தான் எனக் கூறுகிறார். அதனை மறுத்துப் பேசும் ஊழியரை, சாதி பெயரை சொல்லி நடிகர் விக்னேஷ் திட்டுவது பதிவாகியுள்ளது. இதையடுத்து, சாதி பெயரை குறிப்பிட்டு பேசும் நடிகர் விக்னேஷை, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென வன்னி அரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.