நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது : ரீ என்ட்ரி குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்த மீரா ஜாஸ்மின்
Jun 5 2023 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடிகை மீரா ஜாஸ்மின் ரீ என்ட்ரி கொடுத்ததை பற்றி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். கடந்த 2001ஆம் ஆண்டில் மலையாள சினிமா மூலம் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின், திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விமானம், டெஸ்ட் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை மீரா ஜாஸ்மின், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றும், நான் எப்போதும் படத்தின் கதை, அதில் தனக்குள்ள கதாபாத்திரம் ஆகிய இரண்டு விஷயங்களை மட்டும் தான் மனதில் வைத்து தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.